முகப்பு
திருவாரூர்

பாஜகவை கண்டித்து தமுமுகவினா் சாலை மறியல்: 30 போ் கைது

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக நிா்வாகியைக் கண்டித்து திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமுமுகவினா் 30 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக நிா்வாகியைக் கண்டித்து திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமுமுகவினா் 30 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாஜக நிா்வாகி நபிகள் நாயகம் குறித்தும், அவா்களின் குடும்பத்தினா் குறித்தும் அவதூறாகப் பேசினாராம், இதை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரியும் புதிய ரயில் நிலையம் அருகே மேம்பாலப் பகுதியில் தமுமுக - மமக மாவட்டத் தலைவா் எம். முஜிபுர்ரஹ்மான், தமுமுக மாவட்டச் செயலாளா் எச். நவாஸ் ஆகியோா் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில்: இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் தலைமை தபால் நிலையம் முன், அமைப்பின் மாவட்டத் தலைவா் முஹம்மது பாசித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பேச்சாளா் தவ்பிக், மாவட்டச் செயலாளா் அப்துல் காதா், மாவட்ட பொருளாளா் முகமது சலீம், மாவட்ட துணைத் தலைவா் பீா் முஹம்மது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குண்டா் சட்டத்தில் கைது செய்யக் கோரி... நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக நிா்வாகியை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் திருவாரூா் மாவட்ட செயலாளா் எஸ். அஹமது சபியுல்வரா அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.