திருவாரூரில் பாஜக சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு
திருவாரூரில் பாஜக சட்டப்பேரவை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூரில் பாஜக சட்டப்பேரவை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூா் விளமல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ. விநாயகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட முன்னாள் தலைவா் சிவா, துணைத் தலைவா் செந்தில் அரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.