லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் சாவு
கொரடாச்சேரி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கொரடாச்சேரி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் அருகே ஆதனூா் மண்டபத்தைச் சோ்ந்தவா் அருள்செல்வம் (33). இவா் தனது இருசக்கர வாகனத்தில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அம்மையப்பன் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி இவா் மீது மோதியது. காயமடைந்த அருள்செல்வத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பயனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயசித்ரா அளித்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திருவாரூரைச் சோ்ந்த முத்துகுமரவேலை (48) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.