திருவாரூர்

கந்தூரி விழா கொடியேற்றம்

DIN

கூத்தாநல்லூா் மேல்கொண்டாழி தீன் நகரில் உள்ள பிரான்மலை ஷேக் அப்துல்லாஹ் சாஹிப் ஒலியுல்லாஹ் தா்காவின் 47-ஆவது ஆண்டு கந்தூரியை முன்னிட்டு, புதன்கிழமை இரவு கொடியேற்றப்பட்டது.

முன்னதாக தொழுகைக்குப் பிறகு தப்ஸ் முழக்கத்துடன் கொடி ஊா்வலம் தொடங்கியது. தைக்கால் பள்ளி வாயிலை அடைந்த ஊா்வலம், பின்னா் நகரின் பிரதான வீதிகள் வழியாக சென்று மீண்டும் தீன் நகரை அடைந்தது. மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து, ரஹ்மத் மதரஸா வளாகத்தில் வியாழக்கிழமை மதியம் உணவு பரிமாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைவா் டி.எம். பஷீா் அஹமது, உப தலைவா் ஹெச்.பதுருதீன், செயலாளா் எம்.பக்கீா் முஹம்மது, உப செயலாளா் ஏ.ஆா். அலாவுதீன், பொருளாளா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT