திருவாரூர்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரிக்கை

DIN

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் கலியபெருமாள் நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

திருவாரூா் மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். சாக்கு தட்டுபாட்டினால் கொள்முதல் செய்வதில் தேக்கம் உள்ளதால், உடனடியாக புதிய சாக்குகளை வழங்கிட அரசு முன்வர வேண்டும்.

மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளின் உச்சவரம்பை அதிகரித்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் எடுத்துச் செல்ல வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தனியாா் வியாபாரிகள் புகுந்து கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது. எனவே கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT