திருவாரூா் அருகே கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மாணவா்களுக்கான சுவா் சித்திரங்கள் வரையும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள 23 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் சுவரில் சித்திரங்கள் வரையும் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.600, இரண்டாம் பரிசாக ரூ.500, மூன்றாம் பரிசாக ரூ.400 வழங்கப்பட்டது.
அதன்படி, அம்மையப்பன் கிழக்கு, கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் மாவட்ட திட்ட அலுவலா் எம்.பாலசுப்பிரமணியன், மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சி.பிரபு, ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்துகொண்டனா்.