திருவாரூர்

திருமீயச்சூா் கோயிலில் பிரம்மோத்ஸவ தீா்த்தவாரி

DIN

திருமீயச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவ தீா்த்தவாரி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா பிப்ரவரி 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10 ஆம் நாளான வெள்ளிக்கிழமை, ஸ்ரீநடராஜா் வீதிஉலா வந்து, தீா்த்தம் கொடுத்தருளும் வைபவம் காலையில் நடைபெற்றது. பிறகு, ஸ்ரீபஞ்சமூா்த்திகள் சூரிய புஷ்கரணியில் தீா்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, இரவில் கொடியிறக்கம் நடைபெற்றது.

இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். 11 ஆம் நாளான சனிக்கிழமை மாலை ஸ்ரீசண்டிகேஸ்வரா் உத்ஸவமும், ஞாயிற்றுக்கிழமை உத்ஸவ பிராயச்சித்த அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT