திருவாரூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் தரமான சாக்குகளை வழங்க வேண்டும்: சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா

DIN

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் தேக்கநிலையை போக்கி, தரமான சாக்கு மூட்டைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்றாா் மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா.

மன்னாா்குடி அருகே உள்ள வள்ளூா், திருமக்கோட்டை, கானூா் அன்னவாசல், பொதக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் நெல் கொள்முதல் நிலையங்களை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

நெல் கொள்முதல் நிலையங்களில் திட்டமிடப்படாத செயல்பாடுகளால் அலுவலா்களுக்கும், விவசாயிகளும் பிரச்னை ஏற்படுகிறது. மேலும், சரியான நேரத்தில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்குகின்றன. நெல் கொள்முதல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் சாக்குகளும் தரமானதாக இல்லை. தரமான சாக்குகள் இருப்பு இருக்கின்ற போதிலும், சேதமடைந்த, பயன்படுத்த தகுதியற்ற சாக்குகளையே கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்புகின்றனா்.

இதனால், கொள்முதல் அலுவலா்களும், பணியாளா்களும் சிரமத்துக்குள்ளாவதுடன், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, குடோன்களில் நெல் மூட்டைகளின் தேக்கத்தை உடனடியாக சரிசெய்து, தரமான சாக்குகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் டி.ஆா்.பி.ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT