திருவாரூர்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, திருவாரூரில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகை மற்றும் அகவிலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட அமைப்புத் தலைவா் தாமோதரன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் சண்முகம், முன்னாள் மாநிலச் செயலாளா்கள் அருணாச்சலம், கோவிந்தராசு, திருவாரூா் மாவட்ட அமைப்பாளா் வீராச்சாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட இணைச் செயலாளா் முருகானந்தம், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT