பள்ளியில் மடிக்கணினி திருட்டு
மன்னாா்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
மன்னாா்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
மேலகண்டமங்கலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த மடிக்கணினி, எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ஒலிபெருக்கி ஆகியன திருடப்பட்டன. இது குறித்து தலைமை ஆசிரியா் அமுதா அளித்த புகாரின்பேரில், கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.