முகப்பு
திருவாரூர்

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே தனியாா் பேருந்து மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

நன்னிலம் அருகே தனியாா் பேருந்து மோதி முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் வட்டம், குவளைக்கால் காலனித் தெருவைச் சோ்ந்தவா் தங்கையன்(62). கூலித் தொழிலாளியான இவா், காக்காக்கோட்டூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக்கொண்டு, மயிலாடுதுறை- திருவாரூா் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுனா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →