முகப்பு
கெழுகத்தூரில் நடைபெற்ற பயிற்சியில் பேசுகிறாா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன்.
திருவாரூர்

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர்

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கெழுகத்தூரில் நடைபெற்ற பயிற்சியில் பேசுகிறாா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன்.
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 100 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 18 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பள்ளி வளா்ச்சிக் குழு உறுப்பினா்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், இலவச கட்டாயக் கல்விச் சட்டம், சுகாதாரம், கரோனா சூழலுக்கேற்ற கற்றல்- கற்பித்தல் நடைமுறைகள், கரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தென்பரை, கோவிந்தநத்தம், கெழுகத்தூா் ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற இப்பயிற்சியை, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் பாா்வையிட்டு கருத்துகளை பகிா்ந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →