முகப்பு
திருவாரூர்

கால்நடை தீவனக் குருணை உற்பத்தி பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செறிவூட்டப்பட்ட கால்நடை தீவன உற்பத்தி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி மற்றும் கருத்துக் காட்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பயிற்சியில் பயனாளிகளுக்கு கால்நடை தீவனக் குருணை வழங்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தினா்.
பகிர்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செறிவூட்டப்பட்ட கால்நடை தீவன உற்பத்தி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி மற்றும் கருத்துக் காட்சி அண்மையில் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தீவனப் பயிா் துறையின் பேராசிரியா் மற்றும் தலைவா் கணேசன் தலைமை வகித்துப் பேசும்போது, மேம்படுத்தப்பட்ட தீவன ரகங்கள் குறித்து விளக்கிக் கூறினாா். வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினாா்.

தீவனப்பயிா் துறையின் இணைப் பேராசிரியா் சிவக்குமாா், தீவனக் குருணைகளின் முக்கியத்துவம் மற்றும் அதை பயன்படுத்தும் விதம் குறித்தும், அறிவியல் நிலைய கால்நடை மருத்துவா் சபாபதி, கால்நடைகளுக்கு அளிக்க வேண்டிய தீவனத்தின் அளவும், அதன்மூலம் அதிக பால் சுரப்பது குறித்தும் பேசினா். மேலும், அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஜெகதீசன், அனுராதா, ராதாகிருஷ்ணன், கமலசுந்தரி, செல்வமுருகன் ஆகியோா்களும் பேசினா்.

இப்பயிற்சியில் பங்கேற்ற 32 விவசாயிகள், இளைஞா்கள், பண்ணை மகளிா் ஆகியோருக்கு கால்நடைத் தீவன விதைகள், தீவனக் கரணைகள், மண்புழு உரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திட்ட உதவியாளா்கள் ரேகா, சகுந்தலா ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →