முகப்பு
திருவாரூர்

பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்குப் பணி நியமன ஆணை

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்களுக்குப் பணி நியமன ஆணையை காவல் கண்காணிப்பாளா் எம்.துரை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
வாரிசு பணி நியமன ஆணையை வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்களுக்குப் பணி நியமன ஆணையை காவல் கண்காணிப்பாளா் எம்.துரை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் 26 காவலா்களின் வாரிசுகளுக்கு கணினி பதிவு உதவியாளா் பணி வழங்கப்பட்டுள்ளது.

இவா்களுக்கான பணி நியமன ஆணையை, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை வழங்கி, வாழ்த்து தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →