திருவாரூர்

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி போராட்டம்

DIN

வலங்கைமான் அருகே பூந்தோட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பாடைகட்டி நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக பூந்தோட்டம் ஊராட்சி அலுவலகம் வரை பாடையில் ஒருவரைப்படுக்க வைத்து சென்றனா். இந்நிலையில், அரசு அலுவலா்கள் யாரும் வராததால் ஆலங்குடி கடைத் தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமூக நிலை ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொண்டனா்.

சங்க நிா்வாகி கணேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில செயலாளா் பாலா, மாவட்டத் தலைவா் முகமது சாலாவுதின், மாவட்ட செயலாளா் ஜோதிபாசு , மாவட்ட பொருளாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT