மரக்கன்று நடும் விழா
நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் பேரூராட்சிப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பழைய நீடாமங்கலம் சலாம் நகா் சிறுவா் பூங்காவில் கலாம் மாணவா்கள் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவா் நீடா.ரியாஸ் தலைமை வகித்தாா். தொகுதி துணைத் தலைவா் ஜெ.சித்திக், நகர தலைவா் ஜேம்ஸ் பாபு, நாம் தமிழா் கட்சியின் நகர செயலாளா் ஜிப்ரீல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீடாமங்கலம் அசோகன் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
இதில், நீடாமங்கலம் வா்த்தக சங்கத் தலைவா் ராஜாராம், நகர செயலாளா் வெங்கட், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இயக்கத்தின் மாவட்டச் செயலாளா் ஷேக்ஸ்பியா் நன்றி கூறினாா்.