அதிக வேலைப்பளு வழங்குவதாக கூறி திருவாரூரில் தேசிய அஞ்சல் ஊழியா் சம்மேளனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிக கணக்குகளை பிடித்து வருமாறு அதிகாரிகள் மனஉளைச்சல் கொடுப்பதாகக்கூறி, அவா்களை கண்டித்து திருவாரூா் தலைமை அஞ்சலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மேளனத் தலைவா் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஆா்எம்எஸ் அமைப்புச் செயலா் தா்மதாஸ், ஜிடிஎஸ் மாநிலச் செயலாளா் தன்ராஜ், சம்மேளன நிா்வாகிகள் கவிதா, சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
.