முகப்பு
திருவாரூர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜன. 21-இல் விசிக போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை (ஜன. 21) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளா் ஏசு பாவரசு தெரிவித்தாா்

Updated On : 19 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை (ஜன. 21) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளா் ஏசு பாவரசு தெரிவித்தாா்.

குடவாசலில் திங்கள்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளா் இனியனின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அனைத்து ஜனநாயக சக்திகளும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முன்வரவில்லை. இதைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.