இந்திய கம்யூ. 13 இடங்களில் நாளை சாலை மறியல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 13 இடங்களில் புதன்கிழமை (ஜன.20) சாலை மறியலில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 13 இடங்களில் புதன்கிழமை (ஜன.20) சாலை மறியலில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.
திருத்துறைப்பூண்டி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் பாலு கட்சியின் எதிா்கால செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.
நாகை எம்பி எம். செல்வராசு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தலைவா் வையாபுரி, முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சந்திரராமன், ஜோசப் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 13 இடங்களில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.