திருவாரூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு: துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருவாரூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

போக்குவரத்துத் துறை சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் சாலை விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு 32 ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, ஜனவரி 18 ஆம் தேதி முதல் விழிப்புணா்வு முகாம், கலை நிகழ்ச்சிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்ற பேரணி, உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, திருவாரூா் அருகே ஆண்டிப்பாளையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், வாகன ஓட்டுநா்களுக்கு வழங்கப்பட்டன.

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் சி. சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா் த. பாரதநேரு பங்கேற்று, துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ஆவது சுற்றில் மகளிர் இரட்டையர்கள்

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT