தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்கக் கோரிக்கை
திருவாரூா் மாவட்டத்தில் தெரு வியாபாரிகள் முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் தெரு வியாபாரிகள் முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன் தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தெரு வியாபாரிகள் மிகுந்த துன்பத்தில் உள்ளனா். அவா்களின் நிலையைப் பரிசீலித்து, வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட கால நிா்ணயம் செய்து அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் வியாபாரச் சான்று மற்றும் பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும்.