கல்விக் கடன் ரத்து; செவிலியர்கள் பணி நிரந்தரம்! - அதிமுக வாக்குறுதிகள்
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அதிமுக வாக்குறுதி...
அதிமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) வெளியிட்டார். இதில் 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
ஏற்கெனவே 3 கட்டங்களாக 16 வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், முழுத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.
இதில், கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கான சலுகைகள் தொடரும்.
இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு தனி பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்கள் வீடு கட்டிக்கொள்ள குடியிருப்பு மனைகள் தரப்படும்.
அனைத்து மாநகராட்சிகளிலும் சுற்றுச் சாலைகள் அமைக்கப்படும்.
அனைத்து முக்கிய நகரங்கள், சுற்றுலா மையங்களில் இலவச வைஃபை வசதி.
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.
நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நெசவுக் கூடத்தோடு சேர்ந்த பசுமை வீடுகள்.
அறநிலையத் துறை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு.
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும்.
100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது வீரர்கள் இறந்தால், அவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
பூசாரிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
தெரு நாய்கள், மாடுகளுக்கு விலங்குகள் நலக் காப்பகம் அமைக்கப்படும்.
தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.
நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் பள்ளி சீருடைகள், விலையில்லா வேட்டி, சேலை தயாரிக்கப்படும்.
10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்.