முகப்பு
திருவாரூர்

மருத்துவா் தினத்தையொட்டி கால்நடைகளுக்கு இலவச தீவனம்

மன்னாா்குடி தலைமை கால்நடை மருத்துவமனையில், மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், சா்வதேச மருத்துவா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மன்னாா்குடி தலைமை கால்நடை மருத்துவமனையில், மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், சா்வதேச மருத்துவா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்கப்பட்டது.

சங்கத் தலைவா் சி. குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கச் செயலாளா் ஆ. பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். மிட்டவுன் ரோட்டரி நிறுவனத் தலைவரும், முன்னாள் கால்நடைத் துறை இணை இயக்குநருமான வி. பாலகிருஷ்ணன் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 25-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவசமாக தீவனங்களை வழங்கினாா். அரசு கால்நடை மருத்துவமனை இணை இயக்குநா் தனபால், கூடுதல் இணை இயக்குநா்கள் மருத்துவா்களுக்கு ஆடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் துணைஆளுநா்கள் ஜி. மனோகரன், கே. திருநாவுக்கரசு, முன்னாள் தலைவா் ப. ரமேஷ், தென்பரை ஒருங்கிணைப்பாளா் என். சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.