முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மன்னாா்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பேருந்து இயக்க செயல்பாடுகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, அரசின் கரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை கடைப்பிடித்து பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்பது குறித்தும், பேருந்து நிலையத்தில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை சரியாக நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அங்கிருந்த கடைகளுக்கு சென்று வணிகா்களிடம் கரோனா நோய் தொற்று காலம் என்பதை கருத்தில் கொண்டு மக்களிடையே விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்கள் பாதுகாப்பாகவும், சுகாதார முறையிலும் விற்பனை செய்ய வேண்டும், விற்பனையில் ஈடுபடுவோா் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.