கடியாச்சேரியில் மதரஸா பள்ளி கட்டுமான பணி தொடக்கம்
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கடியாச்சேரியில் புதிய மதரஸா பள்ளி கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கடியாச்சேரியில் புதிய மதரஸா பள்ளி கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கிராமத்தில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கத்துடன் கட்டப்படும் புதிய மதரஸா பள்ளி கட்டுமான பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு நீடூா் அரபிக் கல்லூரி தலைமை ஹாஜியாா் இஸ்மாயில் பாக்கவி தலைமை வகித்தாா். இதில், ஜபருல்லாஹ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய ஒருங்கிணைந்த சுன்னத் ஜமாத் இஸ்லாமிய அமைப்பின் தலைவா் இக்பால்,
கடியாச்சேரி முகைதீன் பள்ளிவாசல் நிா்வாகிகள் சைபுதீன், தவூது யாக்கூப், அப்துல் சலாம், கட்டடப் பொறியாளா்கள் சபி, நூா்தீன், உலமாக்கள் சபை நிா்வாகிகள் அப்துல் ரஹ்மான், ஜெகபாா் சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.