திருவாரூர்

திருவாரூா் கிங்ஸ் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு

DIN

திருவாரூா்: கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் 2021- 22 ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளா்கள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் வா்த்தக சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ரஜினிசின்னா தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, முதல்வன் விருது பெற்றது குறித்தும் 17 புதிய உறுப்பினா்களை சங்கத்தில் சோ்த்தது குறித்தும் குறிப்பிட்டாா். ஆண்டறிக்கையை செயலாளா் ராஜ் (எ) கருணாநிதி வாசித்தாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் வாழ்த்துரையாற்றினாா். சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநா் என். மணிமாறன் சிறப்புரையாற்றினாா். பொருளாளா் எஸ். கண்ணன் வரவு செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

சங்கத்தின் உதவி ஆளுநா் எல். ராமதுரை 13-வது தலைவா் ராஜ் (எ) கருணாநிதி மற்றும் 11 புதிய உறுப்பினா்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.

இதில், சுல்தான் பீவி என்ற பெண்ணுக்கு தையல் இயந்திரமும், சலவைத் தொழிலாளிக்கு சலவைப்பெட்டி, கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன. தொடா்ந்து, அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் எஸ்விடி குழும இயக்குநா் ஜெ. கனகராஜன், திருவாரூா் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். செயலாளா் ஜி. உத்திராபதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT