திருவாரூர்

சாலையோரம் மரம் நடும் விழா: எம்எல்ஏ பங்கேற்பு

DIN

திருவாரூா் அருகே சாலையோரம் மரம் நடும் வார விழாவை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இவ்விழாவையொட்டி, திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பழையவலம், ஓடாச்சேரி, ஆமூா், சோழங்கநல்லூா் ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை, எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, வைப்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்ட எம்எல்ஏ, அருகில் இருந்த நியாயவிலைக் கடையில் அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பிறகு, சேதமடைந்த தொகுப்பு வீடுகளை புதுப்பிக்கும் பணியை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சிகளில் திருவாரூா் ஒன்றியக் குழுத் தலைவா் தேவா, ஓடாச்சேரி ஊராட்சித் தலைவா் நெல்சன் மண்டேலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புவனேஸ்வரி, சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT