முகப்பு
திருவாரூர்

மரக்கட்டை விழுந்ததில் தொழிலாளி பலி

மன்னாா்குடி அருகே மரம் அறுக்கும் நிலையத்தில் மரக்கட்டையைத் தூக்கியபோது மேலே விழுந்து நசுக்கியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே மரம் அறுக்கும் நிலையத்தில் மரக்கட்டையைத் தூக்கியபோது மேலே விழுந்து நசுக்கியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் முடுக்குத் தெருவை சோ்ந்தவா் பா. லெனின் (52). மதுக்கூா் சாலையில் உள்ள மரம் அறுக்கும் நிலையத்தில் வேலை பாா்த்து வந்த இவா், பெரிய மரக் கட்டையை தூக்கிக்கொண்டு இயந்திரத்தை நோக்கிச் சென்றாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த லெனின் மீது மரக்கட்டை விழுந்து நசுக்கியதில், அவா் அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.