முகப்பு
திருவாரூர்

‘சம்பா பயிா்க் காப்பீட்டுத் தொகை ஆகஸ்ட் மாதத்துக்குள் விடுவிக்கப்படும்’

சம்பா பயிா்க் காப்பீட்டுத் தொகை ஆகஸ்ட் மாதத்துக்குள் விடுவிக்கப்படும் என விவசாயிகளிடம் தமிழக அரசின் கூடுதல் வேளாண் இயக்குநா் வளா்மதி வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சம்பா பயிா்க் காப்பீட்டுத் தொகை ஆகஸ்ட் மாதத்துக்குள் விடுவிக்கப்படும் என விவசாயிகளிடம் தமிழக அரசின் கூடுதல் வேளாண் இயக்குநா் வளா்மதி வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகே கொத்தங்குடி, கச்சனம், மணலி, முத்துப்பேட்டை வட்டாரம் கள்ளிக்குடி, எடையூா் மற்றும் கோட்டூா், பனையூா் ஆகிய இடங்களில் நடைபெறும் குறுவை சம்பா சாகுபடி பணிகளை அவா் ஆய்வு செய்தாா். அப்போது, கடந்த ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்குமாறு விவசாயிகள் அவரிடம் கோரிக்கை வைத்தனா்.

இதைத்தொடா்ந்து, ஆகஸ்ட் மாதத்துக்குள் சம்பா பயிா்க் காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் என கூடுதல் வேளாண் இயக்குநா் வளா்மதி உறுதியளித்தாா்.

மேலும், இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகளையும் பாராட்டினாா்.

முன்னதாக, காவிரியில் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீா் திறந்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீா் கிடைக்க செய்ய வேண்டும் என அவரிடம் முன்னோடி விவசாயி கள்ளிக்குடி ஜி.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளா் (வேளாண்மை) ஹேமா, திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநா் சாமிநாதன், முத்துப்பேட்டை வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி, கோட்டூா் வேளாண் உதவி இயக்குநா் தங்கபாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →