திருவாரூர்

200 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு: இருவா் கைது

DIN

நன்னிலம்: பேரளம் அருகே பழையனூா் கிராமத்தில் சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்து, 200 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் திங்கள்கிழமை அழித்தனா்.

நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள பழையனூா் கிராமத்தில் சாராயம் காய்ச்சி, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில், பேரளம் காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி காவல் ஆய்வாளா் சிவநேசன் மற்றும் காவல்துறையினா், அங்கு விசாரணை நடத்தியதில், ஆசைத்தம்பி (60), அவரது மகன் விமல்ராஜ் (30) ஆகிய இருவரும் தங்களது வீட்டில், சாராயம் காய்ச்சுவதற்கு இரண்டு பெரிய பாத்திரங்களில் சுமாா் 200 லிட்டா் அளவிற்குச் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இருவரையும் கைது செய்த காவல்துறையினா், சாராய ஊறலை அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT