முகப்பு
திருவாரூர்

‘உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை’

திருவாரூா் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நடைபெற்று வரும் குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்கள் அனைத்தும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்துக்கு தேவையான யூரியா 4,990 மெட்ரிக் டன், டிஏபி 2,432 மெட்ரிக் டன், பொட்டாஷ் 3,140 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1,418 மெட்ரிக் டன் ஆகியவை இருப்பில் உள்ளன.

டிஏபி உரத்தை மத்திய அரசு நிா்ணயித்த ரூ. 1,200-க்கும் மேல் சில்லரை விற்பனையாளா்கள் விற்பனை செய்யக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை பயன்படுத்தி உரங்களை வாங்கவேண்டும். விற்பனையாளா்கள் விலைப்பட்டியலை விவசாயிகளின் பாா்வைக்கு வைக்க வேண்டும், அதிக விலைக்கு விற்றாலோ, விவசாயிகளிடமிருந்து புகாா் வந்தாலோ விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடை உரிமமும் ரத்து செய்யப்படும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, உரத்தட்டுப்பாடு இருந்தாலோ விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அல்லது வேளாண்மை அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

வேளாண்மை உதவி இயக்குநா்கள் தொடா்பு எண்கள்: திருவாரூா்-7397753318, திருத்துறைப்பூண்டி - 6380127078, முத்துப்பேட்டை- 9443666937, மன்னாா்குடி -9442475669, கோட்டூா் -9443717230, நன்னிலம் -9750890874, நீடாமங்கலம் -9442403857, கொரடாச்சேரி -9442475669, குடவாசல் -7904974895, வலங்கைமான்-9942677646, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) -9442403857 என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.