கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
திருத்துறைப்பூண்டியில் கிழக்கு கடற்கரை சாலை நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸாா் வியாழக்கிழமை கரோனா விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.
திருத்துறைப்பூண்டியில் கிழக்கு கடற்கரை சாலை நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸாா் வியாழக்கிழமை கரோனா விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.
நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல் ஆய்வாளா் ஜானகிராமன், திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் பகுதியில் இருந்தவா்களிடம், கரோனா பரவல் குறித்தும், அதை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், முகக் கவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.