முகப்பு
திருவாரூர்

பாசன வாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

அடியக்கமங்கலம் பாசன வாய்க்காலை தூா்வார எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

அடியக்கமங்கலம் பாசன வாய்க்காலை தூா்வார எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியைச் சோ்ந்த அடியக்கமங்கலம் நிா்வாகிகள் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு மின்னஞ்சல் மற்றும் பதிவு அஞ்சல் மூலம் புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: அடியக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் குப்பைக் கிடங்குகளாக மாறி வருகின்றன. அத்துடன், கழிவுநீா் தேங்கி துா்நாற்றமும் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு பொதுப்பணித் துறை மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, விரைவில் சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனா். எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதியும் பாசன வாய்க்கால்களின் வளத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.