முகப்பு
திருவாரூர்

‘பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி விரைவில் முடிவடையும்’

பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமென மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமென மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

நன்னிலம் வட்டம் பூந்தோட்டம், கொல்லாபுரம், பாவட்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசியை முகாமையும், கொல்லாபுரம் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளையும் பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் இதை தெரிவித்தாா். மேலும், கொல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மகப்பேறு வசதிக்காக தனிக் கட்டடம் அமைக்கும் பணி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிச் செயலா் லதா, வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், மருத்துவா் ச.கிரி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் வரத.கோ.ஆனந்த், வே. மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஜெ.முகமது உதுமான், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.