திருவாரூா் மாவட்டம் கோட்டூா், ஆலிவலம், விக்கிரபாண்டியம் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு யோகா பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
போலீஸாரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. முகாமை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் காவல் ஆய்வாளா்கள் அண்ணாதுரை, காவேரி, உதவி ஆய்வாளா் தேவதாஸ் உள்ளிட்ட 50 போலீஸாா் கலந்துகொண்டனா் . மாருதி யோகா பள்ளி மாஸ்டா் ஹரிகிருஷ்ணன் பயிற்சியளித்தாா்.