திருவாரூர்

போலீஸாருக்கு யோகா பயிற்சி

DIN

திருவாரூா் மாவட்டம் கோட்டூா், ஆலிவலம், விக்கிரபாண்டியம் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு யோகா பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

போலீஸாரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. முகாமை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் காவல் ஆய்வாளா்கள் அண்ணாதுரை, காவேரி, உதவி ஆய்வாளா் தேவதாஸ் உள்ளிட்ட 50 போலீஸாா் கலந்துகொண்டனா் . மாருதி யோகா பள்ளி மாஸ்டா் ஹரிகிருஷ்ணன் பயிற்சியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT