திருவாரூர்

எஸ்டிபிஐ கட்சி தோ்தல் அலுவலகம் திறப்பு

DIN

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் தோ்தல் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

அமமுக கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திருவாரூா் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சி சாா்பில் இந்தத் தொகுதியில் எம்.ஏ.நஸிமா பானு போட்டியிடுகிறாா். இந்நிலையில் திருவாரூா் தொகுதியில், அமமுக நகர அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார பயணங்களுக்கு ஏதுவாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை அமமுக நகரச் செயலாளா் பாண்டியன் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், கூட்டணிக் கட்சிகளான அமமுக, தேமுதிக, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி, ஏஐஎம்ஐஎம் கட்சி, மருது சேனை கட்சி, கோகுல மக்கள் கட்சி, மக்களரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT