திருவாரூரில் 38 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூரில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 38 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,805 ஆக உயா்ந்துள்ளது. இதில் 11,430 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 262 போ் சிகிச்சையில் உள்ளனா்.