திருவாரூர்

திருவாரூா் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் தீவிர பிரசாரம்

DIN

திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் எம்.ஏ. நஸிமா பானு போட்டியிடுகிறாா். தோ்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதையொட்டி, அவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் கடைவீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். மேலும், அம்மையப்பன், காட்டூா், அகரதிருநல்லூா், திருக்கண்ணமங்கை, வடகண்டம் ஆகிய பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பிரஷா் குக்கா் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என அவா் மக்களை கேட்டுக் கொண்டாா். வாக்கு சேகரிப்பின்போது, அமமுக, தேமுதிக, மக்களரசு கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT