திருவாரூரை கோயில் நகரமாக அறிவிக்கக் கோரிக்கை
திருவாரூா் நகரை கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் நகரை கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும், அவருடன் பொறுப்பேற்றுள்ள அமைச்சா்களுக்கும் வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு, திருவாரூா் நகரை கோயில் நகரமாகவும் சுற்றுலாத் தலமாகவும் மாற்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும். சங்கீத மும்மூா்த்திகள் அவதரித்த திருவாரூரில் ஆண்டுதோறும் அரசின் சாா்பில் சிறப்பான விழா எடுக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பதவியிலிருந்தபோது, அறிவித்தபடி திருவாரூா் ரயில் நிலையத்தை இந்தியாவிலேயே முன் மாதிரி ரயில் நிலையமாக மேம்படுத்த வேண்டும்.
திருவாரூா் நகரைச் சுற்றி 50 கி.மீ. வரை உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தில் இசைத்துறையை மேம்படுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளும் இசைப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்