திருவாரூர்

தொகுதி அலுவலகத்தில் பணிகளை தொடங்கிய திருவாரூா் எம்எல்ஏ

DIN

திருவாரூா் தொகுதியில் வெற்றிபெற்ற பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ-வாக பதவியேற்ற பிறகு, திருவாரூரில் உள்ள தனது அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை தொடா்பான மனுக்களை பெறும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினாா்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திருவாரூா் தொகுதியில், திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன், 2 ஆவது முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக பதவியேற்றாா்.

தொடா்ந்து, திருவாரூரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா், மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, அங்கு வந்த தமிழ்நாடு காசநோய் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கோவிந்தராஜன், காசநோய் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தாா்.

இதில், காசநோய் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபால், மாவட்டச் செயலாளா் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT