முகப்பு
திருவாரூர்

கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

திருத்துறைப்பூண்டியில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசாரத்தின்போது, எமதா்மன் வேடம் அணிந்து பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், சாலைகளில் எச்சில் துப்பக் கூடாது, எச்சில்கள் காற்றில் கலப்பதன் மூலம் கரோனா அடுத்தவருக்கு வேகமாக பரவும், சுகாதார துறை அறிவுரைகளை ஏற்று பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, தேவையான காய்கனிகள், மளிகை பொருள்களை தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி நகராட்சி, காவல் துறை, வருவாய்த் துறை, லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில், நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி. பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளா் இளங்கிளி வளவன், சாா்பு ஆய்வாளா்கள் சிவகுகன், தேவதாஸ், லாரி உரிமையாளா் சங்க தலைவா் வி. ஆறுமுகம், செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →