கரோனா பொது நிவாரண நிதி
கரோனா பொது நிவாரண நிதிக்காக திருவாரூா் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா், தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளாா்.
கரோனா பொது நிவாரண நிதிக்காக திருவாரூா் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா், தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஐ.சி. மனோகா் யாதவ் என்பவா், வேளாண் இயக்குநா் சிவக்குமாா் வழியாக, முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்:
திருவாரூா் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறேன். தற்போதைய நெருக்கடியான சூழலில், தமிழகத்தை பாதிப்பிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு எனது பங்களிப்பாக, முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு எனது ஏப்ரல் மாத ஊதியமான ரூ. 37,142-ஐ வங்கி காசோலையாக அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.