ஆதரவற்றோருக்கு உணவு
மன்னாா்குடியில் ஸ்ரீசங்கரா அகாதமி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோருக்கு சனிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
மன்னாா்குடியில் ஸ்ரீசங்கரா அகாதமி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோருக்கு சனிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆட்டோவில் சென்று, பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டு சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவா்கள் 200 பேருக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீா் பாட்டில் வழங்கப்பட்டது. இதேபோல், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றையும் வழங்கி, கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டது. இதில், ஸ்ரீசங்கரா அகாதமி இயக்குநா் செ. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.