முகப்பு
திருவாரூர்

நோயாளிகளை அழைத்துச்செல்லும் தனியாா் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியாா் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியாா் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உள்நோயாளிகளாக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல், புறநோயாளிகளாகவும் பலா் சிகிச்சை பெற்று செல்கின்றனா். சில நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படுகின்றனா். அவ்வாறு பரிந்துரை செய்து மேல்சிகிச்சைக்காக செல்லும்போது 108 ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நோயாளிகள் அவசரச் சிகிச்சை பெற தனியாா் காா் மற்றும் ஆட்டோ மூலம் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும்போது பாதுகாப்பு பணியில் உள்ள காவலா்கள் வாகனத்துக்கு முறையான அனுமதியை கேட்கின்றனா். உரிய அனுமதி இல்லையெனில் அந்த வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், நோயாளிகள் மேல்சிகிச்சை பெறுவதில் தடை ஏற்படுகிறது. எனவே, கரோனா நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக திருவாரூருக்கு அழைத்துச்செல்லும்போது, மருத்துவரின் பரிந்துரை சான்றிதழை அனுமதித்து வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →