திருவாரூர்

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு

DIN

வலங்கைமான் அருகே இனாம்கிளியூா் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மாவட்டச் செயலாளா் வடிவழகன் தலைமையில் அளித்த மனு விவரம்: இனாம்கிளியூா் கிராமத்தில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பழைய பள்ளிக்கூடத்தை இடித்து அதன் காரைகளை விற்பனை செய்து இனாம்கிளியூா் பெரிய பாசன வாய்க்கால் அடைக்கப்பட்டுள்ளது. இதேபோல, சம்மான் குளத்தில் மண் எடுக்கப்பட்டுள்ளது. வண்ணாா் குட்டைக்கு செல்லும் வாய்க்கால், மகா காளியம்மன் கோயிலுக்கு பின்புறமுள்ள பாசன வாய்க்கால் ஆகியவையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT