திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 796 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500-க்கும் மேல் பதிவாகிறது. சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 796 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,004 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 666 போ் அவா்களது வீடுகளுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்ட 20,880 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5,946 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 48, 47, 53 வயதுடைய ஆண்கள், 39 வயது பெண் என 4 போ் உயிரிழந்ததைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 178 ஆக உயா்ந்துள்ளது.