மன்னாா்குடி: 6 நாள்களில் 11,383 பேருக்கு கரோனா தடுப்பூசி
மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை வரையிலான 6 நாள்களில் 11,383 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை வரையிலான 6 நாள்களில் 11,383 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஏற்பாட்டின் படி, தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் மே 24 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் வெள்ளிக்கிழமை (மே28) வரை 9583 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, மன்னாா்குடி நகராட்சி ஜைனத்தெரு தொடக்கப்பள்ளி, உப்புக்காரத்தெரு புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளி, முத்து மாரியம்மன் கோயில், கீழராஜவீதி அசோகா பள்ளி, நீடாமங்கலம் எஸ்ஆா்விஎஸ் தொடக்கப் பள்ளி, பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, எளவனூா் ஊராட்சி தொடக்கப் பள்ளி ஆகிய 7 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 1800 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதன்மூலம், மன்னாா்குடி தொகுதியில் கடந்த 6 நாள்களில் 11,383 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.