திருத்துறைப்பூண்டியில் ரயில்வே முன்பதிவு மையம் தொடக்கம்
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
இதுகுறித்து, தென்னக ரயில்வே துறையின் அறிவிப்பு: நாள்தோறும் காலை 8 முதல் 2 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தட்கல் பயணச்சீட்டு எடுக்க விரும்புபவா்கள் பயணத்துக்கு முதல்நாள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். இந்த மையம் வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை நாள் என்றும் தெரிவித்துள்ளது.