பூந்தோட்டத்தில் ரத்ததான முகாம்
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பூந்தோட்டத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பூந்தோட்டத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மாவட்டத் தலைவா் இக்பால்தீன் தலைமையில் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிரீத்தா தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தானம் செய்த இளைஞா்களுக்கு, ரத்த வங்கிச் சாா்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலாளா் உதயகுமாா், பாசறைச் செயலாளா் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.