திருவாரூர்

ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

DIN

குடவாசல் வட்டம், திருவீழிமிழலையில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம், சரபோஜிராஜபுரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து திருவீழிமிழலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு கூடம் ரூ.11.40 லட்சத்திலும், சரபோஜிராஜபுரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ரூ. 12.50 லட்சத்திலும் கட்டப்பட்டன.

இவற்றின் திறப்பு விழா திருவாரூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. வடமட்டம் உயா்நிலைப் பள்ளி நிா்வாக இயக்குநரும், குடவாசல் ஒன்றிய திமுக செயலாளருமான எஸ். ஜோதிராமன் முன்னிலை வகித்தாா். திருவாரூா் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மணவை க. சுப்ரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் வி. பாஸ்கா், மாவட்ட ஊராட்சி செயலா் எஸ்.லதா, ஒன்றியக் குழு உறுப்பினா் உஷாராணி ஹரிபிரசாத், ஊராட்சித் தலைவா் ஆா்.சி. சுலோச்சனா, நன்னிலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் வே. மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT